சென்னை:நீலம் நிதிநல்கைக்கு ('Neelam Fellowship 2021') விண்ணப்பித்து ஆய்வுத்திட்டம் அனுப்பிய மொத்தம் 21 பேரில் 5 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பேருக்கும் ஆய்வுக்கான நிதி உதவி 75ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படவுள்ளது.
பேராசிரியர் சி.லட்சுமணன், ஆய்வாளர் வ.கீதா, பேராசிரியர் இரா.அழகரசன் மற்றும் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் நடுவர்களாக இருந்து அவ்விண்ணப்பங்களை இரண்டு கட்டங்களாகப் பரிசீலித்துத் தேர்வு செய்துள்ளனர்.
'சித்தூர் தென்கரை மகாராஜா சாஸ்தா கோயிலும் அதன் பின்னால் இருக்கின்ற சாதிய கட்டமைப்புகளும்' என்ற ஆய்வுக் கட்டுரைக்காக மு.கார்த்திக்கும், 'அருந்ததியர்களின் தோல் தொழிற்நுட்பம் வரலாற்றுப் பார்வை' என்ற ஆய்வு கட்டுரைக்காக மா. காமாட்சிக்கும் நிதி உதவி கிடைத்துள்ளது.