சென்னை: பெருங்குடியில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் கிடங்கில் நேற்று(ஏப் 27) திடீரென தீ பிடித்தது. குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் உரம் கொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் தீ பற்றியதால் அப்பகுதி முழுவதும் தீ பரவியது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அப்பகுதியில் வசிப்பர்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.