சென்னை: கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 7வது தளத்தில் வசித்து வருபவர் அனுராதாமுரளி(54). இவரது வீட்டில் கடந்த ஒரு மாதமாக பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (டிசம்பர் 29) மதியம் அனுராதா வீட்டில் ஏசி இயந்திரம் வெல்டிங் பணியில் வடமாநில தொழிலாளர்கள் 7 பேர் ஈடுபட்டிருந்தனர்.
படுகாயமடைந்த தொழிலாளர்கள்
அப்போது ஏசி இயந்திரம் பொருத்துவதற்காக வெல்டிங் செய்த போது, எதிர்பாராத விதமாக கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி வட மாநிலத்தைச் சேர்ந்த அக்தர்அலி(28), அமித்(28), ரியாஸ்சுதின்(48), சதீஷ் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்தனர்.