தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 30, 2022, 3:46 PM IST

ETV Bharat / city

உயர்கல்வி உறுதி திட்டத்திற்கு பதிவு செய்ய கால நீட்டிப்பு

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித்துறை உறுதித்திட்டத்திற்கு மாணவியர்கள் விண்ணப்பம் செய்ய ஜூலை 10 ஆம் தேதி வரையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி உறுதி திட்டத்திற்கு பதிவு செய்ய கால நீடிப்பு
உயர்கல்வி உறுதி திட்டத்திற்கு பதிவு செய்ய கால நீடிப்பு

சென்னை: அரசுப்பள்ளிகளில் படித்த மாணவியர் உயர்கல்வி பயிலும் விகிதத்தினை அதிகரிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்படுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழில் நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் போன்ற இளநிலை கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும்.

இத்தொகை மாணவியின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட உள்ளது. இதற்கான பதிவுகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள தகவலில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் மாணவியர்களின் விபரங்களை 30 ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. தற்பொழுது இதற்கான காலக்கெடு ஜூலை 10 ஆம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

2021-22 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவியர்களும் https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்வியில் இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டும், பொறியியல் கல்வியில் இளநிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, 3 ஆம் ஆண்டு மாணவியர்கள் பதிவு செய்யலாம். மேலும் இது குறித்து கூடுதல் விபரங்களை 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிலர் என்னை விளம்பரப் பிரியர் என்கிறார்கள்; எனக்கு விளம்பரம் தேவையா ? - ஸ்டாலின்..

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details