தமிழ்நாடு

tamil nadu

கு.க.செல்வத்தின் வழக்கை வேறு நீதிபதிக்கு பட்டியலிட பரிந்துரை

சென்னை: உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கையும் வேறு நீதிபதி முன்பாக பட்டியலிட உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

By

Published : Sep 28, 2020, 12:03 PM IST

Published : Sep 28, 2020, 12:03 PM IST

ETV Bharat / city

கு.க.செல்வத்தின் வழக்கை வேறு நீதிபதிக்கு பட்டியலிட பரிந்துரை

highcourt
highcourt

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்றது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், திமுகவிலிருந்து நீக்கபட்ட கு.க.செல்வத்திற்கும் விளக்கம் கேட்டு பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்ககள் தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியாது என பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், வழக்கு குறித்து பேரவைத் தலைவர், செயலாளர், உரிமைக்குழு மற்றும் அதன் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வமும், உரிமைக்குழு நோட்டீஸை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வத்தின் வழக்கையும் வேறு நீதிபதி முன்பாக பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை.. வியாபாரிகள் மகிழ்ச்சி..!

ABOUT THE AUTHOR

...view details