தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 7, 2022, 4:28 PM IST

ETV Bharat / city

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாளை செல்லும் ஈபிஎஸ்..! என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்..?

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாளை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாளை செல்லும் ஈபிஎஸ்..! என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்..?
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாளை செல்லும் ஈபிஎஸ்..! என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்..?

சென்னை:அதிமுகவில் ஒற்றை தலைமை யுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி நாளை அதிமுக தலமை அலுவலகத்திற்கு செல்கிறார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது. அன்றிலிருந்து ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்.

அதே நாளில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினரிடையே நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் பொருட்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. பின்னர் ஈபிஎஸ் தரப்பிடம் அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்குமாறு வருவாய் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல ஆவணங்களை திருடிச் சென்றுள்ளதாக புகார் அளித்தார். இந்த வழக்கானது சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று(செப்.7) அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டில் எங்கள் தரப்பை கேட்காமல் தீர்ப்பு வழங்கக் கூடாது என ஈபிஎஸ் தரப்பில் கேடியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும் முன்பு ஈபிஎஸ் நாளை காலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். இந்த தகவலை அறிந்த ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரணைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என அனைவரது மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 72 நாட்களுக்குப் பிறகு ஈபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘தலைவன் ஒருவன் தான் என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்’ - சசிகலாவுடன் ஈபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை முயற்சி..!

ABOUT THE AUTHOR

...view details