தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Anna University Exams: பொறியியல் தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும்: துணைவேந்தர் வேல்ராஜ் திட்டவட்டம்

பொறியியல் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடத்தப்படும் என்றும்; கரோனா தொற்று குறைந்து கல்லூரிகள் திறந்த நிலையில் தேர்வுகளும் நேரடியாகவே நடத்தப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பொறியியல் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள்
பொறியியல் தேர்வுகள்

By

Published : Nov 15, 2021, 6:32 PM IST

சென்னை: கரோனா தொற்றின் காரணமாக, பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வழிகாட்டுதலின் அடிப்படையில், கடந்தாண்டு கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.

கரோனா காலத்தில் ஆன்லைன் தேர்வுகள்

அண்ணா பல்கலைக்கழகம் தவிர, பிற பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வினாத்தாள்களை அனுப்பி விடைகளை மாணவர்கள் வீட்டில் இருந்து எழுதி அனுப்பும் முறையில் நடத்தியது.

அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் நடத்திய தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றன. எனவே அதனைத் தொடர்ந்து ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு (Online Exams) ரத்து செய்யப்பட்டு, பின்னர் ஆன்லைன் மூலம் வினாத்தாள் அனுப்பப்பட்டு, மாணவர்கள் விடைகளைப் பார்த்து எழுதும் முறையில் தேர்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று 2ஆம் அலையின் பாதிப்புக் குறைந்து வருவதால், செப்டம்பர் முதல் உயர் கல்வி மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.

இதனடிப்படையில், இனி மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகமும் மாணவர்களுக்கான தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

திட்டவட்ட முடிவு

பொறியியல் தேர்வுகள்

இந்நிலையில், பருவத்தேர்வுகளை நேரடியாக நடத்தாமல், ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் என தனியார் கல்லூரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், 'பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும். தற்பொழுது கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், தேர்வுகளை நேரடியாக (offline) நடத்துவதே சரியானதாக இருக்கும்.

மேலும் ஆன்லைனில் தேர்வுகளை நடத்தினால் மாணவர்களின் திறன் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும்' எனக் கூறினார்

இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் ரவிக்குமார் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு நவம்பர் 9ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும். பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.ஆர்க்., எம்.பிளான். படிக்கும் மாணவர்களுக்கான செப்டம்பர் டிசம்பர் பருவத்திற்கான தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும். இறுதியாண்டு பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நேரடி முறையில் நடத்தப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஜனவரி மாதம் முதல் நேரடி வகுப்புகள் - அண்ணா பல்கலைக்கழகம்

ABOUT THE AUTHOR

...view details