தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 23, 2020, 6:22 PM IST

Updated : Jul 23, 2020, 7:07 PM IST

ETV Bharat / city

நாளை சென்னையில் எங்கெங்கு மின்தடை?

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக மாடம்பாக்கம் பகுதியில் உள்ள சில இடங்களில் நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் எங்கெங்கு மின்தடை
சென்னையில் எங்கெங்கு மின்தடை

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் நாளை (ஜூலை 24) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

  • ஜோதி வெங்கடாசலம் நகர்
  • பிர்ஷாந்தி காலனி
  • பிருந்தாவனம் நகர்
  • பத்மாவதி நகர் மெயின் ரோடு
  • 1வது, 2வது, 3வது தெரு
  • நடராஜ் நகர்
  • சியோன் பள்ளி
  • ஐ.ஏ.எப் கோட்ரஸ்
  • லட்சுமி அவென்யூ
  • லட்சுமி நகர்
  • ஆனந்தம் பிளாட்ஸ்

இதையும் படிங்க: 12 வருடங்களாக இருளில் மூழ்கி கிடக்கும் தெற்கு சீத்தப்பட்டி... ஒளி கொடுக்குமா அரசு?

Last Updated : Jul 23, 2020, 7:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details