தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனாவால் நுரையீரல் பாதித்த 97 வயது முதியவர் குணமாகி வீடு திரும்பினார் - சென்னை

சென்னை: கரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 97 வயது முதியவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

patient
patient

By

Published : Aug 31, 2020, 1:22 PM IST

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பு, மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்படும் கரோனா நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் சிகிச்சை, செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த 97 வயது முதியவர் சூசை என்பவர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். சிகிச்சையில் முழு குணமடைந்த சூசை, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

கரோனாவால் நுரையீரல் பாதித்த 97 வயது முதியவர் குணமாகி வீடு திரும்பினார்

இதேபோல், சென்னையைச் சேர்ந்த 92 வயதான கணேஷ் என்பவரும், கரோனாவால் நுரையீரல் பாதித்து சர்க்கரை அளவும் அதிகரித்து அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் கணேஷும் குணமடைந்துள்ளார்.

இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி கூறும்போது, ”ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 24,500க்கும் மேலான கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 90 வயதுக்கு மேல் 18 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் 97 வயது முதியவர் ஒருவரும் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

300க்கும் மேற்பட்ட கரோனா பாதித்த கர்ப்பிணிகள் நல்ல முறையில் பிரசவித்துள்ளனர். பச்சிளங்குழந்தைகளும் சிகிச்சைப் பெற்று தாய்மார்களோடு வீடு திரும்பியுள்ளனர்“ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிகளவில் இளைஞர்களை பாதிக்கும் கரோனா!

ABOUT THE AUTHOR

...view details