டெல்லி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு, டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக டிடிவி தினகரனிடமிருந்து பணம் பெற்றதாக, இடைத்தரகர் சுகேஷ் என்ற சந்திரசேகரை கடந்த 2017-ம் ஆண்டு நட்சத்திர ஹோட்டலில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் டிடிவி தினகரன் ஜாமீன் பெற்றதால் வெளியே உள்ளார்.
இந்தப் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சுகேஷிடம் அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில், டிடிவி தினகரன் முன்பணமாக 2 கோடி ரூபாய் கொடுத்ததாகத் தெரிவித்தார்.