தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - இ-பதிவு இல்லாமல் வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு

ஈ டிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

By

Published : May 19, 2021, 5:00 PM IST

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்கள் உத்தரவுக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் மனு

புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்களை நியமித்து பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

'வீட்டிலிருந்தே விளையாடுங்கள்' - ஆன்லைன் கேம்களுக்கு 'குட் பை'

வீடியோ கேம், ஆன்லைன் கேம் என்று ஸ்மார்ட் போனை கையிலிருந்து இறக்கி விடாத குழந்தைகளுக்கு மத்தியில் அதற்கெல்லாம் குட் பை சொல்லி 'குட் ஸ்டூடன்ட்ஸ்' என்று பெயரெடுத்துள்ளனர், சேலம் அரிசிப்பாளையத்தை சேர்ந்த ஷிபி, யோகித் இருவரும்.

’தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவி எண் அமைப்பு’ - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

சென்னை: தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கட்டுப்பாட்டு எண் அமைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் தெரிவித்துள்ளார்.

2 நாட்களுக்கு கோயம்பேடு சந்தையைத் திறக்க அனுமதி

சென்னை: இன்றும் நாளையும் கோயம்பேடு சந்தையில் உள்ள காய்கறிக் கடைகள் திறந்திருக்கும் என சிறு,மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைமைச் செயலக ஊழியர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டி கோரிக்கை!

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் பணியாற்றிவரும் அரசு ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவேண்டி, தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத் தலைவர் செ. பீட்டர் அந்தோணிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இ-பதிவு குழப்பத்தில் பொது மக்கள்!

இ - பதிவு முறையில் குழப்பம் ஏற்பட்டதன் காரணமாக, அவசரத் தேவைகளுக்காக வெளியே சென்றவர்கள் காவல் துறையினரின் வாகனத் தணிக்கையில் சிக்கி செய்வதறியாமல் திணறியுள்ளனர்.

சென்னையில் இ-பதிவு இல்லாமல் வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு!

சென்னை: இ-பதிவு இல்லாமல் வெளியே சுற்றியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவலர் குடியிருப்பில் அழுகிய நிலையில் காவலர் உடல்

சென்னை: கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் அழுகிய நிலையில் காவலர் உடல் மீட்கப்பட்டது.

டவ்-தே புயலில் சிக்கி விபத்துக்குள்ளான கப்பல்: 14 பேர் பலி

டவ்-தே புயலின்போது ’P 305’ என்ற கப்பல் சிக்கி விபத்துக்குள்ளானதில் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர்.

தனது அரசு இல்லத்தை கோவிட்-19 சிகிச்சை மையமாக மாற்றிய பிகார் எதிர்க்கட்சித் தலைவர்

பிகார் எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ், தனது அரசு இல்லத்தை கோவிட்-19 சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details