தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 16, 2021, 5:05 PM IST

ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

ஈ டிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

Top 10 news @ 5 PM
Top 10 news @ 5 PM

அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற டவ்தே புயல்

மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று நிலை கொண்டிருந்த டவ்தே புயல் மேலும் வலுப்பெற்று நேற்று மாலை தீவிர புயலாகவும், இன்று காலை அதி தீவிர புயலாகவும் வலுப்பெற்றுள்ளது.

'என்னையும் கைது செய்யுங்கள்': போஸ்டர் விவகாரத்தில் சவால்விடும் ராகுல்!

பிரதமர் மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய நபர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், முடிந்தால் தன்னையும் கைது செய்யுங்கள் என ராகுல் காந்தி சவால் விட்டுள்ளார்.

"இன்னும் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தித் தொடங்கும்" - அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: இன்னும் ஒரு மாத காலத்தில் பெல் நிறுவனத்தில், ஆக்சிஜன் உற்பத்தித் தொடங்கும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் இலவச உணவு வாங்க குவிந்த மக்கள்!

சென்னை: ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இலவச உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் உணவினை வாங்கிச் சென்றனர்.

தனியார் மருத்துவமனைகளுக்கு 18ஆம் தேதி முதல் நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து!

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகள் மூலமாக ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறை 18ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும்

’காய்ச்சல் மருத்துவ முகாம்களால் மக்கள் பயனடைகின்றனர்’ - சென்னை மாநகராட்சி நிர்வாகம்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 65,92,859 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

பிரதமர் மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய 25 பேர் கைது

பிரமதர் நரேந்திர மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய 25 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

டெல்லியில் மே 24ஆம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு

கரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டுள்ள டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

’ரங்கசாமி குறித்து மோடி நலம் விசாரித்தார்’ - தமிழிசை செளந்தர்ராஜன்

புதுச்சேரி : கரோனா நிலவரம் குறித்து கேட்டறிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, “முதலமைச்சர் ரங்கசாமி குறித்து நலம் விசாரித்தார்” என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தவணை செலுத்திக்கொண்ட நடிகர் அமிதாப் பச்சன்

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details