தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜ.சி.எஃப்.யில் அதிகரிக்கும் போலி போலீஸ் அட்டூழியம்!

சென்னை: சென்னை ஐ.சி.எஃப்.யில் பத்திரிகையாளரிடம் பணம்பறித்த போலி காவலர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போலி போலீஸ்

By

Published : Mar 17, 2019, 7:28 AM IST

ஜ.சி.எஃப். பகுதியைச் சேர்ந்தவர் சேகர். தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்துவருகிறார்.இவர் மார்ச் 3ஆம் தேதி சென்னை கேரஜ் ரயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை எடுத்துவிட்டு சென்றுகொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட 'டிப் டாப் ஆசாமி' சேகரை வழிமறித்துள்ளார். தன்னை காவலர் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் விசாரணை நடத்தியுள்ளார்.

இதில் அவர், 'காவல் நிலையத்திற்கு வந்து ஒரு கையெழுத்து போட்டு விட்டு போ' என சேகரை அழைத்துள்ளார். இதை உண்மை என நம்பிய சேகர் அவருடன் சென்றுள்ளார். லோகோ ரயில் நிலையம் அருகே சென்றபோது, சேகரிடம் 3,000 ரூபாயை பறித்து அந்நபர் தப்பியுள்ளார்.

இதுகுறித்து சேகர் ஐ.சி.எஃப். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். குற்றவியல் ஆய்வாளர் காமேஷ்வரி புகாரை வாங்காமல் ஒரு வார காலத்திற்கு பணம் பறித்தவரை பிடித்து பணத்தை மீட்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதே நபர், கேரஜ் ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்ததை பார்த்த சேகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் வருவதற்குள் அந்த ஆசாமி தப்பிச்சென்றுவிட்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே காவல் நண்பர்கள் குழுவில் வேலை பார்த்துவந்த தமிழரசன் என்ற நபர் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

நேற்று இரவு வண்டலூரில் பதுங்கியிருந்த தமிழரசனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.இந்த நபரால் அந்த பகுதியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details