சென்னை அடுத்த குரோம்பேட்டை போஸ்டல் நகர் பல்லாவரம் நகராட்சிக்குள்பட்ட 22ஆவது வார்டு வரசித்தி விநாயகர் கோவில் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலை முழுவதும் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பாதள சாக்கடை கழிவுநீர் கடந்த நான்கு நாள்களாக சாலை முழுவதும் தேங்கியுள்ளது.
வீதியில் தேங்கிய கழிவுநீர்: வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் குரோம்பேட்டைவாசிகள் தவிப்பு! - Chennai Latest Corporation News
சென்னை: குரோம்பேட்டை சாலையில் வெளியேறும் கழிவுநீரால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
![வீதியில் தேங்கிய கழிவுநீர்: வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் குரோம்பேட்டைவாசிகள் தவிப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4971412-thumbnail-3x2-chrome.jpg)
வீடுகளில் இருக்கும் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு கழிவுநீர் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. சாலைகளில் வெளியேறும் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் உள்ள கிணறுகளில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "பாதள சாக்கடை நீர் வெளியேறுவதை பலமுறை பல்லாவரம் நகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் இன்றுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வீடுகளுக்கு உள்ளேயிருந்து வெளியே வர முடியாத அவலநிலை உள்ளது. எனவே பல்லாவரம் நகராட்சி அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.