தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 14, 2022, 1:18 PM IST

ETV Bharat / city

தமிழ்நாட்டில் இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலை

தமிழ்நாட்டில் இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும், நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் 16:

இந்தியப் பெருங்கடல், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை மறுநாள்(மார்ச் 16) தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 17:

தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 18:

நீலகிரி, தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 14, 15:

தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட ஒரு டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இதையும் படிங்க: 'Covid Update: புதிதாக 2,503 பேர் பாதிப்பு'

ABOUT THE AUTHOR

...view details