தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நாகப்பட்டினத்தில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுகுமாரை நியமனம் செய்துள்ளார். இவர் பதவி ஏற்பது முதல் மூன்று ஆண்டுகள் அந்தப் பதவியில் இருப்பார்.
பேராசிரியர் சுகுமார் 33 ஆண்டுகள் கற்பிக்கும் அனுபவம் கொண்டவர். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன் பதப்படுத்தும் தொழில் நுட்பத் துறை தலைவராக பணியாற்றிவந்தார். பல்கலைக்கழக மானியக் குழுவின் பட்டியலில், இவரின் 24 ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.