டெல்லி: இந்திய முழுவதும் உள்ள சட்டப்பல்கலைக்கழகங்களில் பட்டியல் இனம் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) மாணவர்கள் உரிய வாய்ப்பை பெற முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்றும் இல்லையென்றால், சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் அனைத்து மாநில சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் மற்றும் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், சட்டப்பல்லைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கிடப்பில் தேசிய, மாநில இட ஒதுக்கீடுகள்
அந்தக் கடிதத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றுவது அரசியலமைப்பு சட்டத்தின் கட்டாயமானது என்று ஏற்கனவே கடிதம் எழுதியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த கடிதத்தின்படி, லக்னோ மற்றும் கொச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளிகளில் மட்டுமே மாநில இடதுக்கீடு முறையைச் சரியாகப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் மற்ற மாநிலங்களில் உள்ள சட்ட பல்லைக்கழகங்கள், தேசிய சட்டப்பள்ளிகளில் பட்டியல் இனம் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கான அரசியலமைப்பு சட்ட இட ஒதுக்கீடோ? மாநில இட ஒதுக்கீடோ? பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.