தமிழ்நாடு

tamil nadu

மாநிலங்களவைத் தேர்தல் - திமுகவினர் இன்று வேட்புமனு தாக்கல்

By

Published : Mar 9, 2020, 7:46 AM IST

Updated : Mar 9, 2020, 12:09 PM IST

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலுக்கு போட்டியிடவுள்ள திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

Dmk latest news
Dmk latest news

245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 உறுப்பினர்களின் பதவிகாலம் வரும் ஏப்ரலுடன் நிறைவடையவுள்ளது.

தமிழ்நாட்டில் திருச்சி சிவா (திமுக), டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), விஜிலா சத்யானந்த் (அதிமுக), செல்வராஜ் (அதிமுக), முத்துக்கருப்பன் (அதிமுக), சசிகலா புஷ்பா (அதிமுகவிலிருந்து விலகி தற்போது பாஜகவில் உள்ளார்) ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல மாதத்தில் நிறைவடைகிறது.

மாநிலங்களைவக்கு வரும் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மார்ச் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஐந்து நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்னும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் இன்று மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தல் அட்டவணை

  • மார்ச் 3ஆம் தேதி - வேட்புமனு தாக்கல் தொடக்கம்
  • மார்ச் 13ஆம் தேதி - வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்
  • மார்ச் 16ஆம் தேதி - வேட்புமனு பரிசீலனை
  • மார்ச் 26ஆம் தேதி - வாக்குப்பதிவு

இதையும் படிங்க: மாநிலங்களவை மார்ச் 11ஆம் தேதி வரை ஒத்திவைப்பு

Last Updated : Mar 9, 2020, 12:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details