தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'இனி திமுகவால் காஷ்மீரையும் வளைத்துப் போடமுடியும்!'

சென்னை: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்புத் தகுதியை ரத்து செய்ததன் மூலம் திமுகவால் அங்கும் சொத்துகளை வளைத்துப் போட முடியும் என்று அமைச்சர் ஜெயகுமார் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 7, 2019, 2:23 PM IST

அமைச்சர் ஜெயகுமார்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற குடிமைப் பணிகளை ஏற்கவுள்ள தமிழ்நாடு இளைஞர்களுக்கு அண்ணா மேலாண்மை மையத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன. மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தேர்வாகியுள்ள இளைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "1984ஆம் ஆண்டு மாநிலங்களவையில் ஜம்மு - காஷ்மீர் விவகாரம் வந்தபோது, காஷ்மீரை இந்தியா இறையாண்மைக்கு உட்பட்டுக் கொண்டுவர வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார். தற்போது அதனைத்தான் தற்போது பிரதமர் நிறைவேற்றி உள்ளார்" என்று பாராட்டு தெரிவித்தார்.

மேலும், "இதனால் திமுகவுக்கு லாபம்தான். எல்லா இடங்களிலும் சொத்து வாங்கியவர்களுக்குக் காஷ்மீரில் சொத்து வாங்க முடியாத நிலை இருந்தது. தற்போது அவர்களுக்குத்தான் இது சாதகமாக உள்ளது" என்றார்.

அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலு பேசியது குறித்து கேட்டதற்கு, "வாதத்திற்கு வாதம் வைக்கலாமே தவிர முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றெல்லாம் கூறக் கூடாது. முதுகெலும்பைப் பற்றி திமுக பேச முடியாது. பல்வேறு விஷயங்களில் மாநில உரிமைகளைத் தாரைவார்த்தது திமுகதான். முதுகெலும்பு இருப்பதால்தான் அதிமுக அரசு தற்போது வரை நிமிர்ந்த நன்னடையோடு நன்றாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details