சென்னை பட்டாபிராமில், ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் , இதற்கு முன்பு ஆண்ட கட்சிக்கும், தற்போது ஆளும் கட்சிக்கும் சரிசமமான பலத்துடன் தேமுதிக இருக்கிறது.
ஒரு கட்சியை எப்படி வளர்க்க வேண்டும், அதனை ஆட்சிக்கு எப்படி கொண்டுவர வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். 234 தொகுதிகளிலும் 10 சதவீதம் வாக்குகள் பெற்று நிரூபித்து காட்டிய கட்சி தேமுதிக மட்டுமே.