தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 5, 2020, 1:39 PM IST

ETV Bharat / city

விஜயகாந்த் குறித்து கார்ட்டூன் - நாளிதழ் மீது புகார்

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட நாளிதழைக் கண்டித்து அக்கட்சியினர் புகாரளித்துள்ளனர்.

complaint
complaint

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா ஆகியோரின் புகழுக்கும் மரியாதைக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தில், தமிழ் நாளிதழ் ஒன்று கார்ட்டூன் செய்தி வெளியிட்டதாகக்கூறி பல்வேறு இடங்களில் அந்த நாளிதழை தேமுதிகவினர் தீயிட்டுக் கொளுத்தி முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக விஜயகாந்த் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக, அந்த நாளிதழ் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

அதில், அந்த நாளிதழின் ஆசிரியர், செய்தி வெளியீட்டாளர், கார்ட்டூன் வரைந்த ஓவியர் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விஜயகாந்த் குறித்து கார்ட்டூன் - நாளிதழ் மீது புகார்

இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆட்சியரிடம் மனு

ABOUT THE AUTHOR

...view details