சென்னை:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வேலப்பாடியை சேர்ந்த செந்தில்குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு கருத்துக்களைப் பதிவு செய்து பரப்பியதாக, ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் ரவி என்பவர் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி செந்தில் குமார் தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து முன்ஜாமீன்கோரி உயர் நீதிமன்றத்தில் செந்தில் குமார் மனுதாக்கல் செய்திருந்தார்.
தான் அதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை என்றும், தனிப்பட்ட விரோதம் காரணமாக அளிக்கப்பட்டப் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.