இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்,
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த முறையில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் குழந்தைகள் சேர்க்கை, பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என மாவட்டதந்தோறும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டுச் சான்றிதழும், 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.
2018 -19 ஆம் ஆண்டுக்கு 'கனவு ஆசிரியர்' திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர் கம்ப்யூட்டர், செல்போன் ,ஸ்மார்ட் போர்டு, வீடியோ மூலம் பாடம் நடத்துதல், இணையதள பயன்பாட்டு பலகை உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்த தெரிந்தவராகவும், அறிவியல் தொழில் நுட்பத்தையும் மாறிவரும் கற்றல்-கற்பித்தல் தொழில்நுட்பத்தையும் உபயோகப்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கும் திறன் படைத்தவராகவும் இருக்க வேண்டும்.
அதேபோல் பள்ளிகளில் கல்வி இணை செயல்பாடுகளில் அதிக அளவில் மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களை தேர்வு செய்ய வேண்டும்.