சென்னை:மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை முதல்வர்கள், இயக்குநர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்களுக்கு பாலியல் சீண்டல்களை கொடுத்த, இரண்டு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதோடு, பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு ஏதேனும் உள்ளதா என மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகளில் முதல்வர்களும், இயக்குநர்களும் நேரடியாக சென்று, தனித்தனியாக விசாரிக்க வேண்டும்.