இங்கிலாந்திலிருந்து வாங்கிவந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்ய கே.கே. நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிடக்கோரி திரைப்பட இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். காருக்கு ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்தியும், நுழைவு வரி செலுத்தி தடையில்லாச் சான்று பெற்றால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என வட்டார போக்குவரத்து அலுலர் மறுத்துவிட்டதாக மனுவில் கூறியிருந்தார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தத் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றமும், கேரள உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாக மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.