சென்னை:நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் 'இன்னுயிர் காக்கும் திட்டம்'-ஐ கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்தூரில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் விபத்துகளில் காயமடைந்தவர்களில் சிகிச்சை பெறும் 80 ஆயிரமாவது நபர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று (ஜூன்20) போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். பின்னர் செதியாளர்களிடம் பேசிய அவர், 'இதுவரை இந்த திட்டத்தில் 80 ஆயிரமாவது நபர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
இதுவரை இந்த திட்டத்தில் ரூ.72 கோடியே 64 ஆயிரத்து 39 ஆயிரம் மருத்துவ செலவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கட்டுப்பாடுகள் குறித்து, ஏதும் இதுவரை அறிவிக்கவில்லை. முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை என்பது 90 % ஆக உள்ளது.