தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுப்ரமணிய சாமி மீதான அவதூறு வழக்கு ரத்து! - அரசுக்கு நீதிபதி எச்சரிக்கை! - சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு எச்சரிக்கை

சென்னை: சுப்ரமணிய சாமிக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம் உரிய முகாந்திரமின்றி அவதூறு வழக்குகள் தொடரப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

high court
high court

By

Published : Dec 9, 2020, 7:28 PM IST

கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி, பிரதமர் மோடிக்கு, பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணிய சாமி எழுதிய கடிதத்தை தினமலர் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்கள் வெளியிட்டன. அக்கடிதத்தில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போது, தான் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவிடம் தொலைபேசியில் பேசி மீனவர்களை விடுவிக்க வகை செய்வதாகவும், ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக சுப்ரமணிய சாமி மற்றும் இரு நாளிதழ்கள் மீது தமிழக அரசு சார்பில் அதே ஆண்டு 2 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சுப்ரமணிய சாமி சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சுப்ரமணிய சாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி ராமசாமி, ஏற்கனவே அவதூறு வழக்கை எதிர்த்து நாளிதழ்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்துள்ளதாக எடுத்துரைத்தார்.

இதையடுத்து, சுப்ரமணிய சாமி மீதான அவதூறு வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, முகாந்திரம் இல்லாத விவகாரங்களில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும், இனி அப்படியான வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசுக்கு எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க:நடிகர் சங்க அலுவலகத்தின் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன - நாசர்

ABOUT THE AUTHOR

...view details