தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 8, 2022, 4:52 PM IST

ETV Bharat / city

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

சென்னை:திருப்பூர் மாவட்டம் தாரபுரத்தில் 2016ஆம் ஆண்டில் நடந்த கூட்டத்தில் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவித்தார். இந்த கருத்துகள் ஜெயலலிதா மீது அவதூறாக பரப்பும் விதமாக உள்ளதாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (ஏப். 8) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இளங்கோவன் தரப்பில்,ஜெயலலிதா குறித்து அவதூறாக எதுவும் பேசவில்லை. ஜெயலலிதா குறித்து தனிப்பட்ட முறையில் பேசியதற்கு வழக்கு தொடர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுகொண்ட நீதிபதி, அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details