தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெளிநாட்டு கரன்சிகளை கைப்பற்றிய சுங்கத்துறை!

சென்னை: விமானநிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ. 84 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

By

Published : Dec 24, 2019, 8:18 PM IST

Chennai airport latest
Chennai airport latest

சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையிலிருந்து மலேசியா செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த சென்னையை சேர்ந்த பாலமுருகன் (30), அழகர்சாமி(42), அப்துல் மாலிக்(50), குமார்(43), அன்பரசன்(31), சசிகுமார் (32), காளிமுத்து(45), பாலாஜி(28) ஆகிய எட்டு பேரை சுங்கத்துறையினர் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க, ஆஸ்திரேலிய டாலர்கள், மலேசிய ரிங்கிட் ஆகிய கரன்சிகளை கண்டுபிடித்தனர். எட்டு பேரிடம் இருந்து மொத்தம் ரூ. 73 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கைப்பற்றினார்கள்.

84 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கைப்பற்றிய சுங்கத்துறை!

அதேபோல் சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நூருல்லா(37) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவரிடமிருந்தும் ரூ. 10 லட்சத்து 53 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.

ஒன்பது பேரிடமும் இருந்து மொத்தம் ரூ. 84 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கரன்சிகள் ஹவாலா பணமா? என்ற கோணத்திலும் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் ரூ.3 கோடி மோசடி!

ABOUT THE AUTHOR

...view details