தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் மருத்துவ நிபுணர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதில் 19 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்பு ஊரடங்கு இப்போதைக்கு தளர்த்தக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இணை இயக்குநர் பிரதீப் கெளர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை. கரோனா நீண்ட நாள்களாக இருக்கும் என்பதால், நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். சில இடங்களில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த ஆலோசனைகளை வழங்கி உள்ளோம்.