தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரடங்கால் இலவச உணவு வாங்க குவிந்த மக்கள்!

சென்னை: ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இலவச உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் உணவினை வாங்கிச் சென்றனர்.

By

Published : May 16, 2021, 3:54 PM IST

ஊரடங்கால் இலவச உணவு வாங்க குவிந்த மக்கள்
ஊரடங்கால் இலவச உணவு வாங்க குவிந்த மக்கள்

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் மே 24ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி சுற்றித் திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உணவங்கள் இன்று அடைக்கப்பட்டுள்ளதால் அம்மா உணவகங்களில் மக்கள் உணவு வாங்கிச் சென்றனர்.

நீண்ட வரிசையில் நின்று உணவு வாங்கிச் சென்ற பொதுமக்கள்

அதேபோல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தனியார் நிறுவனமான சங்கல்ப் சார்பில் இலவச உணவு வழங்கி வருகின்றனர். ஏழை, எளிய மக்கள், சாலையோரம் தங்கும் மக்கள், கட்டடத் தொழிலாளர்கள் இலவச உணவுகளை நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க:வீடு வீடாக சென்று தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு' - அமைச்சர் சேகர்பாபு தகவல்.

ABOUT THE AUTHOR

...view details