தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ”நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துவருகிறார். மொழிமாற்றத்திற்கான மென்பொருள் உருவாக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேர் விடுதலையில் முதலில் முயற்சி எடுத்தது ஜெயலலிதாதான். இவ்வழக்கில் இன்று நீலி கண்ணீர் வடிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.