சென்னை: சென்னை பாலவக்கத்தை சேர்ந்தவர் பிளம்பர் தொழிலாளி ஜோசப். இவர், அவரது நண்பருடன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிகாலையில் டீக்கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, நீலாங்கரையிலிருந்து திருவான்மியூர் நோக்கி நான்கு இளைஞர்கள் பைக் ரேஸ் சென்றுள்ளனர். அதில் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார் ஓட்டி வந்த கேடிஎம் மோட்டார் பைக் மோதி, ஜோசப் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ஜோசப்பின் மரணத்திற்கு 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரது தாய் ஸ்டெல்லாவும், மனைவி சத்தியபிரியாவும் இணைந்து, சென்னை மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.