தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பின் 2ஆம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் நாள்தோறும் 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூரிலும் தினமும் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து வருகின்றனர். ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள், திருநின்றவூர் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்வதில் சுகாதாரத் துறையினர் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “தமிழ்நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.