செங்கல்பட்டு: அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. இந்த கல்லூரியில் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த நிலையில், மே 3ஆம் தேதி 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர்களுடன் தொடர்பிலிருந்த மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த வகையில், நேற்று தொற்று எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. இதையடுத்து மகளிர் விடுதியில் உள்ள 7 பணியாளர்கள், 34 நர்சிங் மாணவிகள், 355மருத்துவ மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல், ஆண்கள் விடுதியில் பணியாளர்கள், மாணவர்கள் என மொத்தம் 927 பேருக்கு பரிசோதனை மெற்கொள்ளப்பட்டது.