தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 6, 2020, 12:39 PM IST

ETV Bharat / city

அண்ணா நகரில் கரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை நெருங்குகிறது!

சென்னை: அண்ணா நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்குகிறது.

Corona
Corona

சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. அண்ணா நகரில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தப் பரவலைக் குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மற்றும் மக்களுக்குத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

நோய் சற்று அதிகரித்துவந்தாலும் குணமடைந்தோரின் விழுக்காடும் அதற்குச் சமமாக உள்ளது. தற்போது குணமடைந்தோரின் விழுக்காடு 97ஆக உள்ளது. சிகிச்சைப் பெற்று வருபவர்களின் விழுக்காடு 2ஆக உள்ளது.

இதுவரையிலும் சென்னையில் மொத்தம் இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 24 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இரண்டு லட்சத்து ஒன்பதாயிரத்து 997 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எஞ்சியுள்ள மூன்றாயிரத்து 336 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் மூன்றாயிரத்து 871 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.

மண்டல வாரியான பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல்,

அண்ணா நகர் - 23,918 பேர்

கோடம்பாக்கம் - 23,400 பேர்

தேனாம்பேட்டை - 20,825 பேர்

ராயபுரம் - 19,209 பேர்

தண்டையார்பேட்டை - 16,797 பேர்

திரு.வி.க. நகர் - 17,308 பேர்

அடையாறு - 17,321 பேர்

வளசரவாக்கம் - 13,765 பேர்

அம்பத்தூர் - 15,377 பேர்

திருவொற்றியூர் - 6,637 பேர்

மாதவரம் - 7,874 பேர்

ஆலந்தூர் - 8,844 பேர்

சோழிங்கநல்லூர் - 5,753 பேர்

பெருங்குடி - 7,976 பேர்

மணலி - 3,445 பேர்.

இதையும் படிங்க: பாஜகவின் இன்னொரு முகமே ரஜினி - தொல். திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details