தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 686 பேருக்கு கரோனா உறுதி - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 686 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

By

Published : Jun 20, 2022, 9:50 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 686 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 686 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று (ஜுன். 20) புதிதாக 17 ஆயிரத்து 112 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

அதில், அமெரிக்காவிலிருந்து வந்த 1 நபர், அரபிக் நாட்டில் இருந்து வந்த ஒருவர் உட்பட மேலும் 686 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 57 லட்சத்து 29 ஆயிரத்து 32 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மூலம் 34 லட்சத்து 19 ஆயிரத்து 583 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மட்டும் தனிமைப்படுத்தும் மையங்களில் 3 ஆயிரத்து 951 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 294 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 129 நபர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொறியியல் சேர்க்கை: முதல் நாளிலேயே 18ஆயிரம் பேர் பதிவு

ABOUT THE AUTHOR

...view details