தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 26, 2020, 11:02 AM IST

ETV Bharat / city

சென்னையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி!

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கண்டெய்னர் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டது.

பள்ளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி
பள்ளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் பணிக்காக 20 அடியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்தப் பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலிருக்கு அதன்மேல் தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் இன்று(அக்.25) நள்ளிரவு சென்னை துறைமுகத்திலிருந்து இரும்பு பொருள்களை ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி சென்றுகொண்டிருந்தபோது, பாலம் எடைதாங்காமல் சரிந்தது. அதனால் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து சிக்கியது. நல்வாய்ப்பாக ஓட்டுநர் பள்ளத்தில் சிக்கியபோது வெளியே குதித்து தப்பித்தார்.

பின்னர் 4 மணி போராட்டத்திற்கு பிறகு லாரி பள்ளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. விரைவில் சாலை சீரமைக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்: நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details