இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா தொற்று பரவல் காரணமாக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டம் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை (நீல நிற அட்டை) வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதற்காக, மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் வார்டு வாரியாக விவரங்கள் பெறப்பட்டு, நிதி வழங்கப்பட்டுவருகிறது.