தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாநில கல்விக் கொள்கை குறித்து செப்டம்பர் 15-க்குள் கருத்து தெரிவிக்கலாம்

தமிழ்நாடு அரசினால் உருவாக்க உள்ள மாநிலத்திற்கான தனிக்கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் குழுவிற்கு தெரிவிக்கலாம் என டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் அறிவித்துள்ளார்.

By

Published : Jul 15, 2022, 3:24 PM IST

Updated : Jul 15, 2022, 4:19 PM IST

மாநில கல்விக் கொள்கை குறித்து செப்டம்பர் 15-க்குள் கருத்து தெரிவிக்கலாம்
மாநில கல்விக் கொள்கை குறித்து செப்டம்பர் 15-க்குள் கருத்து தெரிவிக்கலாம்

சென்னை:இதுகுறித்து மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் தலைவரும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் காண தனித்துவமான மாநில கல்விக் கொள்கை உருவாக்கிட உரிய நடவடிக்கையில் மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கு உயர்மட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும், center for excellence building, 3ஆவது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை 600025 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

மேலும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், சேலம், வேலூர், சென்னை ஆகிய எட்டு இடங்களில் மண்டல அளவில் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அனைவருக்கும் சமமான கல்வி ஏற்படுத்திதர வேண்டும்- காமராஜர் பேத்தி வலியுறுத்தல்

Last Updated : Jul 15, 2022, 4:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details