சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து கொண்டே வேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, வணிக நிறுவனம், ஹோட்டல்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எனினும், தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் (ஜனவரி 8) தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.