சென்னை:தலைமைச்செயலகத்தில் உள்ள பெரிய மரம் ஒன்று, மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்த விபத்தில் முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் கவிதா உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தலைமைச் செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டடத்தின் அருகிலுள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் ஒன்று மழையின் காரணமாக, இன்று காலை சுமார் 9 மணியளவில் வேரோடு சாய்ந்து விழுந்தது.
முதலமைச்சரின் ஆழ்ந்த இரங்கல்
அப்போது , அங்கே காவல் பணியிலிருந்த முத்தியால்பேட்டை போக்குவரத்துக் காவல் நிலைய தலைமைக் காவலர் கவிதா, மரத்தினடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.