தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.100 கோடி மதிப்பில் கல்வித்திட்ட பணிகள் - தொடங்கி வைத்த முதலமைச்சர்! - govt education works started by cm palanisamy

சென்னை: ரூ.100 கோடி மதிப்பில் கல்வி நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

cm palanisamy

By

Published : Nov 19, 2019, 3:06 PM IST

உயர் கல்வித் துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏழு கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார், நிர்வாகக் கட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அரசு தொழில் நுட்பக் கல்லூரிகள், அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 82 கோடியே 94 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் திறந்து வைத்து, சென்னை பிர்லா கோளரங்கத்தில் ரூ. 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மின்னணு கருவி, கோளத்தில் அறிவியல் கருவி ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

இதனுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணி காலத்தில் காலமான 41 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்வில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ், தலைமைச் செயலாளர் சண்முகம், கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரூ. 100 கோடி மதிப்பில் கல்வித் திட்டப்பணிகள் தொடக்கம்!
இதையும் படியுங்க: அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த நாராயணசாமி!

ABOUT THE AUTHOR

...view details