தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 22, 2020, 4:48 PM IST

ETV Bharat / city

சுற்றுலாத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் திறப்பு!

சென்னை: சுற்றுலாத்துறை சார்பில் ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

function
function

தலைமைச் செயலகத்தில் இன்று, சுற்றுலாத்துறை சார்பில் தேனி மாவட்டம், அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிக் கட்டடம் மற்றும் சுரபி நதிக்கரையின் படித்துறை வாய்க்காலில் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தளம் மற்றும் சிமெண்ட் பேவர்பிளாக் கல் கட்டுமானம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், சுற்றுலாத்துறை ஆணையர் ராஜேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சென்னையில் உருவாகும் மியாவாக்கி அடர்வனங்கள்!

ABOUT THE AUTHOR

...view details