கோவிட்-19 இரண்டாம் அலை பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கோவிட்-19 கட்டளை மையத்திற்கு நேற்று இரவு (மே 14) சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு ஆய்வு செய்தார்.
மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் ஒதுக்கீடு போன்ற ஒருங்கிணைப்பு பணிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை அவர் கேட்டறிந்தார்.