தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதியோர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து - முதலமைச்சர் அனுமதி - பழனிசாமி உத்தரவு

நோயின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியோர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

By

Published : Jul 15, 2020, 1:11 PM IST

சென்னை: முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கவும், சிகிச்சைகள் அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து அரசு மேற்கொண்டு வருகிறது. கோவிட்-19 நோய்த் தொற்று, முதியவர்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த
நோய், இருதயம் சார்ந்த நோய்கள் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று
தெரியவந்துள்ளது.

இச்சூழலில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் 50 ஆண்டுகளாக பிசிஜி தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இது உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை (Innate Immunity) அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. பிசிஜி தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் நோய்வுற்ற விகிதமும், உயிரிழப்பு விகிதமும் (Morbidity & Mortality Rates) குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்கூறிய காரணங்களின் அடிப்படையிலும், இன்றளவில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையிலும் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தை செலுத்தி அதன் செயல்திறனை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தமிழ்நாடு அரசின் அனுமதியை கோரியிருந்தது.

இதனை ஏற்று உடனடியாக உரிய அனுமதியை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த சோதனை முயற்சியை ICMR நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute of Research in Tuberculosis) வெகு விரைவில் தொடங்கவுள்ளது.

பிசிஜி தடுப்பு மருந்தை முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் கோவிட்-19 நோயின் தீவிரத் தன்மையை குறைக்கவும் மருத்துவமனையில் அனுமதியை தவிர்க்கவும் உயிரிழப்பை குறைக்கவும் பேருதவியாக அமையும். தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொள்ளும் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் தொடர் பணிகள் மூலம் மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details