தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Video In: திருநங்கைக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம்

Video In: சென்னையில் கஞ்சா விற்பனை செய்த திருநங்கைக்கும் காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

By

Published : Dec 28, 2021, 4:15 PM IST

காவல் துறையிடம் வாக்குவாதம் செய்த திருநங்கை
காவல் துறையிடம் வாக்குவாதம் செய்த திருநங்கை

சென்னை: Video In: தலைமைச் செயலக கால மூலிகை பார்க் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் சில நபர்கள் நின்று இருப்பதாக தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்குத் தகவல் வந்தது. அதனடிப்படையில் ரோந்துப் பணியில் இருக்கும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு நின்றிருந்தவர்களை விசாரித்துள்ளனர்.

அப்போது, அங்கிருந்த திருநங்கையான விசாலி என்பவருக்கும் ரோந்துப்பணி காவல் துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில், திருநங்கை விசாலி காவல் துறையினரை ஆபாசமாகத் திட்டியுள்ளார்.

அதனை செல்போனில் வீடியோ எடுத்த சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வேகமாகப் பரவி வருகின்றன.

காவல் துறையிடம் வாக்குவாதம் செய்த திருநங்கை

தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், விசாலி அந்தப் பகுதி இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, விசாலியிடம் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து தங்கம் பறிமுதல் - மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details