தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 3, 2022, 3:30 PM IST

ETV Bharat / city

முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடங்கள்

செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடம் மற்றும் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Etv Bharatமுதலமைச்சர் ஸ்டாலின் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார்
Etv Bharatமுதலமைச்சர் ஸ்டாலின் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார்

சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 3) தலைமைச்செயலகத்தில், உள் (போக்குவரத்துத்) துறை சார்பில் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகக்கட்டடம் மற்றும் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு
3 கோடியே 72 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடம் ஆகியவற்றைத்திறந்து வைத்தார்.

போக்குவரத்துத்துறை அலுவலகப்பணிகளான பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்குதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை வரிகளை வசூலித்தல், வாகனத்தணிக்கை போன்ற பல்வேறு பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளவும், பொதுமக்கள் சிரமமின்றி போக்குவரத்துத்துறை தொடர்பான சேவைகளைப்பெறவும், புதிய பகுதி அலுவலகங்களை தோற்றுவித்தல், பகுதி அலுவலகங்களை வட்டாரப்போக்குவரத்து அலுவலகமாகத்தரம் உயர்த்துதல், ஓட்டுநர் தேர்வுத்தள வசதிகளுடன் புதிய வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களை அமைத்தல் போன்றப் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாரப்போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

மேலும் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 3 கோடியே 72 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இவ்வலுவலகங்கள், பொதுமக்கள் காத்திருப்பு அறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அறை, கணினி அறை, கூட்டரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அரசு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details