தமிழ்நாடு

tamil nadu

இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை திட்டம்!

By

Published : Oct 28, 2020, 12:25 PM IST

Updated : Oct 28, 2020, 1:27 PM IST

சென்னை: சட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.3,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

function
function

தமிழ்நாட்டில் சட்டப்படிப்பு முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவு சான்றிதழ் பெற, தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத்தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும். அதன் பின்னர் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டு காலம் பயிற்சி பெற வேண்டும். இந்த நடைமுறைகள் முடிந்து அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது.

இந்த காலக்கட்டத்தில் பல வழக்கறிஞர்கள் வறுமை நிலைக்கு செல்வதோடு, ஒரு சிலர் வேறு மாற்றுத்தொழிலுக்கு சென்று விடுகின்றனர். எனவே, இது போன்ற ஒரு நிலை இளம் வழக்கறிஞர்களுக்கு வராத வகையில், 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று (அக்டோபர் 28) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் துணை முதலமைச்சர் ஓ‌. பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மூத்த அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை திட்டம்!

இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு வாகனங்கள் - முதலமைச்சர் துவக்கிவைப்பு!

Last Updated : Oct 28, 2020, 1:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details