சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்ட எல்லைக்குள் எந்த ஒரு இடத்திலும் பேரழிவு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது. குறிப்பாக ஓஎன்ஜிசி கச்சா எடுக்கிறோம் என்கிற பெயரிலும், மூடப்பட்ட கிணறுகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்கிற அடிப்படையில் பல்வேறு அனுமதிகளை பெற முயற்சித்தாலும் முதலமைச்சர் அதற்கு நிரந்தர தடை விதித்து விட்டார்.
எனவே ஏற்கனவே அனுமதி பெற்றோம் என்கிற பெயரில் புதிதாக கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்டுள்ள கிணறுகளை மறு செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் அனுமதிக்க கூடாது எனவும் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.